நல்வரவு
வணக்கம் !
Saturday 25 February 2017
Thursday 23 February 2017
என் பார்வையில்- தாயுமானவள் (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் – திரு வை.கோபாலகிருஷ்ணன்
வானதி பதிப்பகம் – சென்னை
விலை ரூ 45/-
கோபு சார் என்றழைக்கப்படும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வலையுலகில் மிகவும் பிரபலமானவர். பத்து மாதங்கள், வெற்றிகரமாக சிறுகதை விமர்சனப் போட்டி நடத்திப் பரிசு என்ற பெயரில், ஓய்வூதியப் பணத்தை வாரியிறைத்துப் பதிவர்களின், விமர்சனத் திறமையை வெளிக் கொணர்ந்து, பட்டை தீட்டியவர்.
Thursday 16 February 2017
என் பார்வையில் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே'
ஆசிரியர்:- கவிஞர் நா.முத்துநிலவன்
வெளியீடு:- அகரம், தஞ்சாவூர்.
பல்வேறு காலங்களில் தினமணி, ஜனசக்தி
முதலிய நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல்.
மாணவர்களின் பாட்டு, ஓவியம், பேச்சு, எழுத்து, குழுவாகச்
செயல்படுவது முதலிய பன்முகத் திறமைகளுக்கு மதிப்பளிக்காது, மதிப்பெண்
ஒன்றை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு, அவர்களின் திறமையை
மதிப்பீடு செய்யும், இக்காலக் கல்வியின் அவல நிலையையும், மாணவர்களின்
மீது வன்முறையைப் பிரயோகித்து, அதிக மதிப்பெண் எடுக்க வைக்கத் தனியார் கல்வி நிறுவனங்கள்
செய்யும் அடாவடித்தனத்தையும், கடந்த ஆண்டு, வெளியான
‘அப்பா’ திரைப்படம், வெளிச்சம் போட்டுக்காட்டி அதிர்வலையை
ஏற்படுத்தியது.
Subscribe to:
Posts (Atom)