நல்வரவு

வணக்கம் !

Sunday 15 November 2015

என் பார்வையில் புதுகை பதிவர் விழா – 2


 முந்தைய பதிவின் தொடர்ச்சி….
வலைப்பதிவர் கையேடு ஒரு சாதனை என்று சென்ற பதிவில் சொன்னேன் அல்லவா?  அது பற்றி இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்ல மறந்துவிட்டேன்.  கடையில் நாம் வாங்கும் பொருட்களில் கணிணி  விலை பார்கோடு போல (BAR CODE) இக்கையேட்டில் QUICK RESPONSE CODE எனப்படும்  ஃகியூ ஆர் கோடு (QR CODE) தொழிட்நுட்பத்தைப்  பயன்படுத்தித் தயாரித்திருப்பது ஒரு சாதனை. 
QUCIK RESPONSE CODE
கைபேசியில் கியூ ஆர் கோடை தரவிறக்கி வைத்துக்கொண்டு, அதனை கையேட்டில் நாம் விரும்பும் வலைப்பூவுக்குப் பக்கத்தில் உள்ள கியூ ஆர் கட்டத்தின் மீது காட்டினால், அடுத்த நிமிடம் அத்தளத்துக்குச் சென்றுவிடும்.  நாம் வலைப்பூவின் பெயரைத் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை!    

விழாவுக்கு நானும் என் தந்தையும் வருவதாக பதிவு செய்திருந்தோம்.  ஆனால்  முதல் நாள் மாலை அவருக்குத் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்படவே, என் தங்கையுடன் புதுக்கோட்டைக்குப் பயணமானேன்.

அதிகாலை 5.30 மணிக்குக் காரில் புறப்பட்ட நாங்கள், புதுகை வந்து சேர்ந்த போது மணி 10. வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாதா ஹாலை அடையும் போது மணி பத்தரை. 

வாசலில் நாங்கள் வந்து இறங்கவும், ஏதோ வேலையாக அண்ணன் முத்துநிலவன் அவர்கள் வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.  அவரிடம் போய் அறிமுகப்படுத்துக்கொண்டபோது, வாங்க வாங்க என இன்முகம் காட்டி வரவேற்றார்.

வாசலில் நின்றிருந்த விழாக்குழுவினரும், இன்முகத்துடன் வரவேற்று கைப்பை, பேனா, குறிப்பேடு முதலியவற்றை அளித்தனர்.

நான் வந்த அமர்ந்த சிறிது நேரத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.  விமர்சனப்போட்டிக்கான பரிசை மேடைக்குச் சென்று வாங்கப் போன போது விழாக்குழுவின் பொருளாளர் கீதாவைச் சந்தித்துப் பேசினேன்.   ஓய்வு ஒழிவின்றி உழைத்ததால் களைத்திருந்தாலும், மலர்ந்த முகத்துடன் மேடைக்கும் வாசலுக்கும் ஏதோ வேலையாய் விழா முடியும் வரை நடந்தவண்ணமாகவேயிருந்தார்.

மேடையில் ஏறிய சமயம், வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலனைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  வாங்க வாங்க என வரவேற்றார்.  அவரிடம் ஒரு நிமிடம் பேசிவிட்டுப் பரிசைப் பெற்றுக்கொண்டு, மறுபடி இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். 

அடுத்த நிமிடம் நீங்கள் தான் கலையரசியா என்று கேட்டபடி, பாவலர் சசிகலா வந்து தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  விழாவில் சந்திக்க வேண்டும் என விரும்பியவர்களில், அவரும் ஒருவர்.  அவருடைய மரபுக் கவித்திறன் கண்டு பலசமயம் நான் வியந்திருக்கிறேன்.  அவரிடம் அளவளாவிய அம்மணித்துளிகள், வாழ்வின் மிகவும் மகிழ்வான தருணங்கள்!     

அடுத்து திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் நானே சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.  அவர் வங்கிப்பணியிலிருந்தவர் என்று ஏற்கெனவே அறிந்திருந்தேன்.  ஆனால் அவர் எங்கள் ஸ்டேட் பாங்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அவரைச் சந்தித்த போது, அறிந்து கொண்டேன்.  விருப்ப ஓய்வு பெற்றவரிடம் தற்போதைய வங்கிப்பணிச்சூழல் குறித்துப் பேச, நிறைய செய்திகள் இருந்தன. 
      
மூத்த பதிவர் திரு சீனா அவர்களிடமும், திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களிடமும் சென்று அறிமுகம் செய்த போது, அவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.  இவ்வாண்டு ஜனவரி கடைசி வாரம், திரு வை.கோபு சார் சிபாரிசின் மூலமாக அறிமுகமாகி, வலைச்சர ஆசிரியர் பணி செய்தேன் என்பதை நினைவுப்படுத்தினேன்.  ஆனால் அவர்களுக்கு என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. 

கீதமஞ்சரி கீதா மதிவாணன் சிலரிடம் தம் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுக்குமாறு சொல்லியிருந்தார்.  எனவே மேடையில் நடந்த பதிவர் அறிமுகத்தை உன்னிப்பாகக் கவனித்து, அவர்கள் யார் யார் என்றறிந்து கொண்டேன். 

அவர்களில் ஒருவர் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா,’ திரு ரமணி ஐயா அவர்கள்.  அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்,’ புத்தகத்தை அளித்தேன்.  அன்புப் பரிசினைப் இன்முகத்துடன் பெற்றுக்கொண்ட அவர், கீதாவுக்கு தம் மகிழ்ச்சியையும் நன்றியினையும் தெரிவிக்கச் சொன்னார். 

இரண்டாவதாக திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் ‘வித்தகர்கள்’ நூலை மேடையில் எஸ்ரா முன்னிலையில் வெளியிடத் தயாராகிய வேளையில்,  கீதாவின் புத்தகத்தைக் கொடுத்தேன்.  அவர் எனக்கொன்றும் கீதாவுக்கு ஒன்றுமாக ‘வித்தகர்கள்,’ நூலை அன்பளிப்பாக அளித்தார்.  

உடல்நலக்குறைவு காரணமாகவும், கடுமையான பணிச்சுமை காரணமாகவும், அதனை இன்னும் நான் வாசிக்கவில்லை.  விரைவில் வாசித்து, என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன்.

மதிய உணவு இடைவேளையின் போது உமையாள் காயத்ரியைச் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.  எகிப்திலிருந்து தமிழகம் திரும்பிவிட்டதாய்த் தெரிவித்தார். 

விழாவில் கலந்து கொண்ட  பெண் பதிவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.  நான் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த பெண் பதிவர்கள் பலர் வராததில், எனக்கு ஏமாற்றமே. 

விக்கிப்பீடியாவில் 250 கட்டுரைகள் எழுதி சாதனை படைத்திருக்கும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களிடம் சென்று அறிமுகம் செய்துகொண்டேன்.  மூங்கில் காற்று முரளிதரன் அவர்களையும் மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களையும் சந்திக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.  
  
அடுத்து கூட்டாஞ்சோறு செந்தில் என்னைச் சந்தித்துப் பேசினார்.  சுற்றுச்சூழல் வகைமையில், அவருடைய எல்லாக் கட்டுரைகளுமே மிகவும் சிறப்பாக இருந்தன; இருட்டு நல்லது என்ற கட்டுரை, முதற்பரிசு பெற்றதில் வியப்பேதுமில்லை என அவரைப் பாராட்டினேன்.  கீதா மதிவாணனின் புத்தகத்தை நான் அவருக்கு அன்பளிப்பாகத் தர, பதிலுக்கு அவர் புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். 

மைதிலி கஸ்தூரிரெங்கன் படைப்புகள் சிலவற்றை வாசித்திருந்த நான் அவரைச் சந்திக்கவேண்டும் என விருப்பப்பட்டேன்.  கீதாவிடம் சென்று அவர் எங்கே எனக்கேட்டேன்.  அவர் மாடியில் இருப்பதாகவும் கீழே வரும் போது சொல்வதாகவும் சொன்னார்.  பின்னர் மைதிலியையும் அவர் மகள் நிறையையும் சந்தித்துப் பேசியது நிறைவாக இருந்தது.  அவருக்கு என்னைத் தெரியாது என நினைத்திருந்தேன்.  ஆனால் ஊமைக்கனவுகள் சகோவின் தளத்தில் நான் இட்ட பின்னூட்டங்கள் வாயிலாக அவர் என்னை அறிந்திருந்ததாகச் சொன்ன போது, எனக்கு மிகுந்த வியப்பு!

தொடர்வேன்……….


(படங்கள் அனைத்தும் வலைப்பதிவர் விழா பக்கத்திலிருந்தும், விழா பற்றிய பதிவர்களின் பதிவுகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை)

35 comments:

  1. நிகழ்வை மீண்டும் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள் அருமை தொடர்கிறேன்

    ReplyDelete
  2. வாங்க கில்லர்ஜி சார்! பதிவை வெளியிட்டு முடித்தவுடன் சுடச்சுட பின்னூட்டத்தைப் பார்த்து மிகுந்த வியப்படைந்தேன். உங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete
  3. தாங்கள் வழங்கிய சகோதரி கீதமஞ்சரி அவர்களின்
    என்றாவது ஒரு நாள்
    நூலினைப் ப்ற்றி ஒரு பதிவு எழுதியிருக்கின்றேன்
    வாய்ப்புக் கிடைக்கும் பொழுது வாசித்துப் பாருங்கள் சகோதரியாரே
    http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக விரைவில் வாசித்துக் கருத்திடுவேன் சகோ! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி!

      Delete
  4. ஆஹா, என் படமும் வந்திருக்கிறதே !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா! உங்களை நான் வெகு அருகிலேயே பார்த்தேன். வை.கோபு சார் தளம் மூலமாக உங்களை நான் நன்கு அறிந்திருந்தேன். ஆனால் உங்களுக்கு என்னைத் தெரியாது என்பதால் வந்து பேசவில்லை. அறிமுகம் செய்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. நான் புகைப்படம் எதுவும் எடுக்கவில்லை. திரு தமிழ் இளங்கோ எடுத்து வெளியிட்ட படத்தையே என் பதிவிலும் போட்டுக்கொண்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  5. வணக்கம்
    பதிவை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ரூபன்.

      Delete
  6. வணக்கம்

    ஒன்றை மறந்து விட்டீர்கள்... அதை எழுத வில்லை....
    த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நான் மறக்கவில்லை ரூபன்! இந்தப் பதிவில் முழுக்க முழுக்க சந்தித்த பதிவர்கள் பற்றியே எழுதியிருக்கிறேன். விழா நிகழ்வுகள் குறித்து எதுவும் எழுதவில்லை. ஜன்னல் ஓரத்து நிலா வெளியீடு குறித்து அடுத்த பதிவில் எழுதுவேன். விழாவுக்குச் சென்ற நான் அந்நூலை வாங்க மறந்து வந்துவிட்டேன். அது எங்குக்கிடைக்கும் என்று மட்டும் சொல்லுங்கள். வாங்கிப் படித்து கருத்துக்களை எழுதுகிறேன். மிகவும் நன்றி ரூபன்!

      Delete
  7. 'உடல்நலக்குறைவு காரணமாகவும், கடுமையான பணிச்சுமை காரணமாகவும்' நானும் சிலநாட்களாக வலைப்பக்கமே வரவில்லை. இன்று வந்ததும் உங்கள் பதிவு பார்த்து மகிழ்ந்தேன்.சரி, கீதாவின் நூல்பிரதி எனக்குக் கிடையாதா? (உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளவும். வலை எங்கும் போய்விடாது, உடல்நலம் போனால் வராது)த.ம.+1

    ReplyDelete
    Replies
    1. உடல்நலக்குறைவு காரணமாகத் தான் அடுத்த பதிவு எழுதுவதற்கு இவ்வளவு காலதாமதம் ஆகிவிட்டது. உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கீதா புத்தகத்துடன் தந்தை எழுதிய நூல்கள் இரண்டும் எடுத்து வந்தேன். ஆனால் அன்று தாங்கள் விழாவின் தலைமைபொறுப்பை ஏற்றுப் பரபரப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்த போது நான் வேறு இடையில் புகுந்து உங்களைத் தொந்திரவு செய்ய மனமின்றி இருந்துவிட்டேன். நேரங்கிடைக்கும் போது உங்கள் முகவரிக்கு அனுப்பிவிடுகிறேன். உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள். மிகவும் நன்றி அண்ணா!

      Delete
  8. மகிழ்ச்சியான அந்தநாளை நினைவுபடுத்தியதோடு, அன்பின் சீனா, முனைவர் பழனி.கந்தசாமி மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோருடன் நான் இருக்கும் புகைப்படம் வெளியிட்டமைக்கும் நன்றி.

    நிறையபேரோடு நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். நேரம் இல்லாமல் போய் விட்டது. அவர்களில் நீங்களும் ஒருவர். நேரில் உங்களைச் சந்தித்த பிறகு, நீங்களும் ஸ்டேட் பாங்க் குடும்பத்தில் ஒருவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் படம் எதுவும் எடுக்காததால், நீங்கள் வெளியிட்ட புகைப்படத்தையே எடுத்து நான் போட்டு விட்டேன். அதற்கு முதலில் என் நன்றி. உங்களை அன்று சந்தித்துப் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம் குறைவாக இருந்தது என்பது உண்மை தான். அதுவும் நான் விழாவுக்குத் தாமதமாக வந்தேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  9. மிகவும் மகிழ்ச்சிம்மா...உங்களைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன்,,..அன்று சந்தித்ததில் மகிழ்வே...பதிவர் விழாப்பதிவுகள் எங்களை உங்களுடன் இணைத்துள்ளதை எண்ணி பெருமைப்படுகின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. விழாவில் முக்கிய பொறுபேற்று நீங்கள் செயலாற்றிய விதம் போற்றிப் பாராட்டத்தக்கது. உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி கீதா! வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  10. அருமையான அனுபவப் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அருமையான அனுபவப்பகிர்வு என்ற பாராட்டுக்கும் தங்கள் வருகைக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  11. மறுபடியும் இனிய நினைவுகளில் மூழ்கினேன்...

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் இனிய நினைவுகளில் மூழ்க என் பதிவு பயன்பட்டிருக்கிறது என்ப்தையறிய மகிழ்ச்சி. உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு தனபாலன் சார்!

      Delete
  12. தளத்தில் இணைத்தமைக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

    ReplyDelete
  13. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  14. கலையரசி அக்கா! என்னை தெரியுமா? நான் ஹேகா!
    நிஷா என் சொந்த பெயர். எப்படி இருக்கின்றீர்கள் அக்கா? வீட்டில் அனைவரும் நலமா?

    இங்கே http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_15.html உங்களுக்கு தொடர் பதிவு அழைப்பு உண்டுக்கா.. முடிந்தால் தொடருங்கள்.

    உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டும்.... நிஷா

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிஷா! நீங்களும் வலைப்பூ துவங்கியிருப்பதை இப்போது தான் அறிந்தேன். தமிழ் மன்றத்தில் கபிலரின் நூறு பூக்கள் தொடர் நீங்கள் எழுதியது தானே? நீங்களும் குடும்பத்தினரும் நலமா? தொடர்பதிவுக்கு என்னை அழைத்திருப்பதை அறிந்தேன். நான் தொடர கொஞ்சம் அவகாசம் வேண்டும். என்றும் உங்களுக்கு அன்பும் ஆதரவும் உண்டு நிஷா!

      Delete
    2. ஆமாம் அக்கா! நானே தான்! வந்து விட்டேன் அக்கா!

      Delete
  15. நிறைய செய்திகளைத் தந்திருக்கின்றீர்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  16. அடுத்தப் பதிவுக்குத் தாமதமானாலும் நிதானமாக அழகாக அன்றைய அனுபவங்களைத் தொகுத்து எழுதியுள்ளமை பாராட்டுக்குரியது. QR code பற்றி தங்கள் பதிவு வாயிலாகத்தான் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி அக்கா. குறைந்த நேரமேயானாலும் அன்று நீங்கள் சந்தித்த பதிவர்கள் குறித்து சிறப்பாக எழுதியுள்ளீர்கள். தொடரும் பதிவுகளுக்காய்க் காத்திருக்கிறேன். உடல்நலத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா!

      Delete
  17. அருமையான நினைவூட்டல், பதிவில் என் படத்தையும் இணைத்தமைக்கு நன்றி. என்றாவது ஒருநாளை இன்னும் முழுவதுமாக முடிக்கவில்லை. நல்ல புத்தகத்தை பரிசளித்த தங்களுக்கும், தங்களை சந்திக்க வைத்த பதிவர் திருவிழாவுக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி செந்தில்! அருமையான நினைவூட்டல் என்ற பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  18. நிகழ்வை நினைவில் நிறுத்தும் வகையில்
    அகழ்ந்து கொடுத்தீர் அமுது !

    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  19. தங்கள் வருகைக்கும் அருமையான தொடர் என்ற பாராட்டுக்கும் நன்றி சீராளன்!

    ReplyDelete
  20. பதிவர்விழாவில் கலந்துக்கொள்ளமுடியாத ஆதங்கத்தை உங்களின் இந்த தொடர் பதிவு தீர்த்தது. நான் அங்கிருந்த உணர்வு !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  21. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...1

    ReplyDelete